ஹேமசிறி பெர்னாண்டோ வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ வைத்தியசாலையில் அனுமதி

by Staff Writer 02-07-2019 | 10:24 AM
Colombo (News 1st) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று ஆஜராகமுடியாது என, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் இன்றைய தினம் ஆஜராகமுடியாது என அவர் கூறியுள்ளார். கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் இன்று (2ஆம் திகதி) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்காக அவர்கள் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.