சிறை விதிக்கப்பட்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு பிணை

Update: பிரதி பொலிஸ்மா அதிபர் ஹெக்டர் தர்மசிறிக்கு பிணை

by Staff Writer 02-07-2019 | 1:30 PM
Colombo (News 1st) Update: ஊழல் குற்றச்சாட்டில் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஹெக்டர் தர்மசிறிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஹெக்டர் தர்மசிறிக்கு 3 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து, நீதவான் லங்கா ஜயரத்ன இன்று (2ஆம் திகதி) உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் குற்றவாளிக்கு 3 இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு தனது தனிப்பட்ட நிர்மாணப்பணிகளுக்காக சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் சிலரை ஈடுபடுத்தியமை உள்ளிட்ட 15 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அவற்றில் 6 குற்றச்சாட்டுகளில் ஹெக்டர் தர்மசிறி குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இதேவேளை, ஏனைய 9 குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரை விடுவித்து விடுதலை செய்து நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.