பாதகமான உடன்படிக்கைகளுக்கு இணக்கம் தெரிவிக்கப்போவதில்லை: சஜித் பிரேமதாச

by Bella Dalima 02-07-2019 | 8:06 PM
Colombo (News 1st) நாட்டிற்கு பாதகமான உடன்படிக்கைகளுக்கு இணக்கம் தெரிவிக்கப்போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாட்டின் உயரிய சட்டமான அரசியலமைப்பை எவரேனும் மீறுவார்களாயின் அவர்களின் உறுப்புரிமை மாத்திரமல்லாது நாட்டின் பிரஜாவுரிமையையும் இரத்து செய்ய வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். லுணுகம்வெஹர ரஜமஹா விகாரையில் நடைபெற்ற நிகழ்விலேயே சஜித் பிரேமதாச இதனை தெரிவித்தார். இதன்போது, 873 குடும்பங்களுக்கு சமுர்த்தி பத்திரம் வழங்கப்பட்டது.