நாட்டின் சில பகுதிகளில் அதிக வெப்பம்

நாட்டின் சில பகுதிகளில் அதிக வெப்பம்

by Staff Writer 02-07-2019 | 8:12 AM
Colombo (News 1st) ​மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று (2ஆம் திகதி) அதிக வெப்பம் நிலவக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதனால் குறித்த பகுதிகளிலுள்ள மக்கள், போதுமானளவு நீரைப் பருகுவதுடன், வௌிர்நிற ஆடைகளை அணியுமாறும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. இதேவேளை, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் வடக்கு, வட மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரை காற்று வீசும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.