குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சியாளர்களுக்கும் உதவும் பிரிவில் ரிஷாட் பதியுதீன் வாக்குமூலம்

by Staff Writer 02-07-2019 | 7:09 PM
Colombo (News 1st) குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சியாளர்களுக்கும் உதவி மற்றும் பாதுகாப்பளிக்கும் பிரிவிற்கு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று சென்றிருந்தார். தமக்கெதிராக சுமத்தப்பட்டுள்ள சில குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சியாளர்களுக்கும் உதவி மற்றும் பாதுகாப்பளிக்கும் பிரிவில் அண்மையில் முறைப்பாடு செய்திருந்தார். அந்த முறைப்பாடு குறித்து வாக்குமூலமளிப்பதற்காகவே அவர் இன்று சென்றிருந்தார். ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவத்தின் பின்னர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிராக செய்த முறைப்பாட்டிற்கு தேவையான மேலதிக தகவல்களை வழங்க தான் இன்று சென்றிருந்ததாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டார். இதேவேளை, சதொச வாகனம் பயன்படுத்தப்பட்டதாக விமல் வீரவன்ச சுமத்திய குற்றச்சாட்டிற்கு எதிராகவும் முறைப்பாடு செய்ததாக அவர் கூறினார்.