காலி மாவட்டத்தின் சில பகுதிகளில் நீர்வெட்டு

காலி மாவட்டத்தின் சில பகுதிகளில் 9 மணிநேர நீர்வெட்டு

by Staff Writer 02-07-2019 | 7:50 AM
Colombo (News 1st) காலி மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று (2ஆம் திகதி) 9 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இந்த நீர்வெட்டு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தேகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதனடிப்படையில் பத்தேகம, ஹல்பதொட, சந்தரவல, கனேகம, மஹாகொட, நாகொட, மீமெடும, கோணபீனுவல, தெல்வத்த, கழுபே உள்ளிட்ட பிரததேசங்களுக்கும் ஹிக்கடுவ நகரிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.