புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் இயக்குநர் விஜய்

வாழ்வின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் இயக்குநர் விஜய்

by Chandrasekaram Chandravadani 01-07-2019 | 4:13 PM
இயக்குநர் விஜய் தனது இரண்டாவது திருமணம் தொடர்பில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். கிரீடம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய விஜய் தெய்வத்திருமகள், தலைவா மற்றும் மதராசபட்டினம் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இதன்பின்னர், தெய்வத்திருமகள் மற்றும் தலைவா ஆகிய படங்களில் நடித்த அமலா பால் மற்றும் இயக்குநர் விஜய் இடையே மலர்ந்த காதலானது 2014ஆம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து, 2 வருடங்களின் பின்னர் இருவருக்கு இடையே ஏற்பட்ட கருத்து ​வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து பெற்றனர். இதனையடுத்து, பெற்றோரின் வற்புறுத்தல் காரணமாக, சென்னையைச் சேர்ந்த வைத்தியரான ஐஸ்வர்யா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக, இயக்குநர் விஜய் அறிவித்துள்ளார். வாழ்க்கைப் பயணம் எப்போதுமே அனைவருக்கும் அதன் சொந்த வழியில் சிறப்பானதும் தனித்துவமானது. எல்லோருடைய வாழ்க்கையைப் போலவே என் வாழ்க்கையும் வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி, வலி ஆகியவற்றை உள்ளடக்கிய வெவ்வேறு கட்டங்களில் பயணித்து வந்துள்ளதாக சுட்டிக்காட்டிய இயக்குநர் விஜய், அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஆதரவாக இருந்த ஊடகங்களிற்கு நன்றி தெரிவித்துள்ளார். தனது வாழ்வின் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதாகவும் 2019 ஜூலையில் தமது திருமணம் ஒரு குடும்ப விழாவாகக் கொண்டாடப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.