19 ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்த தரப்பினரே அதனை விமர்சித்து ஊடகங்களுக்கு கருத்து

by Staff Writer 29-06-2019 | 10:18 PM
Colombo (News 1st) 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்வதற்கு கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, சட்டத்தரணி லால் விஜேநாயக்க உள்ளிட்டோர் முன்நின்று செயற்பட்டனர். எனினும், தற்போது ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு நெருக்கடி நிலைமையில், 19 ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்த தரப்பினரே அதனை விமர்சித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர். 'த ஐலண்ட்' பத்திரிகைக்கு கருத்து தெரிவித்துள்ள கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, 19 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு தனது தரப்பிலிருந்து ஆரம்பத்தில் கொண்டுவரப்பட்ட சட்டமூலம் அவ்வாறே நிறைவேற்றப்பட்டிருப்பின் குளறுபடிகள் ஏற்பட வாய்ப்பில்லை என குறிப்பிட்டுள்ளார். 19 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு பின்னர் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் அந்த சட்டமூலத்தை பலவீனமாக்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். காணொளியில் காண்க...