by Staff Writer 29-06-2019 | 3:28 PM
Colombo (News 1st) கற்பிட்டி - நுரைச்சோலை மற்றும் ஆராச்சிகட்டு - முத்துபந்திய கடற்கரைகளில் அடையாளந்தெரியாத இருவரின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.
புத்தளம் - நுரைச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலுவ பகுதியில் இன்று காலை சடலமொன்று கரையொதுங்கியுள்ளது.
ஆணொருவரின் சடலமே கரையொதுங்கியுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சடலம் அடையாளங்காண முடியாத வண்ணம் சிதைவடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நுரைச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, ஆராச்சிகட்டு - முத்துபந்திய கடற்கரையில் இருந்து மீட்கப்பட்ட சடலம் வௌிநாட்டவர் ஒருவருடையது என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலங்கள் மீதான நீதவான் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.