அடையாளந்தெரியாத இருவரின் சடலங்கள் கரையொதுங்கல்

இருவேறு கடற்கரை பகுதிகளில் அடையாளந்தெரியாத இருவரின் சடலங்கள் கரையொதுங்கல்

by Staff Writer 29-06-2019 | 3:28 PM
Colombo (News 1st) கற்பிட்டி - நுரைச்சோலை மற்றும் ஆராச்சிகட்டு - முத்துபந்திய கடற்கரைகளில் அடையாளந்தெரியாத இருவரின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. புத்தளம் - நுரைச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலுவ பகுதியில் இன்று காலை சடலமொன்று கரையொதுங்கியுள்ளது. ஆணொருவரின் சடலமே கரையொதுங்கியுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். மேலும், சடலம் அடையாளங்காண முடியாத வண்ணம் சிதைவடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். இது தொடர்பிலான ​மேலதிக விசாரணைகளை நுரைச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, ஆராச்சிகட்டு - முத்துபந்திய கடற்கரையில் இருந்து மீட்கப்பட்ட சடலம் வௌிநாட்டவர் ஒருவருடையது என பொலிஸார் தெரிவித்தனர். சடலங்கள் மீதான நீதவான் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.