உயர்தர தென்னங்கன்றுகள் விநியோகம்

22,000 தெங்கு செய்கையாளர்களுக்கு உயர்தர தென்னங்கன்றுகள் விநியோகம்

by Staff Writer 28-06-2019 | 4:17 PM
Colombo (News 1st) தெங்கு உற்பத்தியை அதிகரித்து அதன் மூலம் வருமானத்தை ஈட்டும் வேலைத்திட்டத்தை தெங்கு அபிவிருத்தி சபை முன்னெடுத்துள்ளது. தனியார் துறையுடன் இணைந்து இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதன் கீழ் 22,000 தெங்கு செய்கையாளர்களுக்கு உயர்தர தென்னங்கன்றுகள் வழங்கப்படுவதுடன், மானிய உதவிகளை வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த தென்னங்கன்றுகள் ஐந்து வருட காலங்களில் அறுவடையை தரக்கூடியவை என தெங்கு அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.