வடக்கில் இடம்பெறும் மணல் கடத்தலின் பின்புலத்தில் இருப்பது யார்: ஶ்ரீதரன் வௌிக்கொணர்வு

by Staff Writer 27-06-2019 | 7:25 PM
Colombo (News 1st) வடக்கில் இடம்பெறும் மணல் கடத்தல் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஶ்ரீதரன் இன்று சபையில் கருத்துத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,
கௌதாரிமுனையிலுள்ள மண் பாதுகாக்கப்பட்ட ஒரு வளம். டக்ளஸ் தேவானந்தாவின் சகோதரன் தான் இந்த மண்னை அள்ளுகின்றார். சந்திரகுமார், டக்ளஸ் தேவானந்தா இவர்கள் தான் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஸவின் தேர்தல் பிரசாரத்திற்காக ஒவ்வொரு சமுர்த்தி பயனாளிகளிடமிருந்தும் 2000 ரூபாவை அறவிட்டிருந்தார்கள். இப்பொழுது அறிவிடப்படுகின்ற 500 ரூபாவை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. கிளிநொச்சி மாவட்டத்தில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் சமுர்த்தி உத்தியோகத்தர்களுடைய பழிவாங்கலால் பயன் கிடைக்காமல் இருக்கின்றனர்.