யட்டியாந்தோட்டையில் பஸ் விபத்து; 28 பேர் காயம்

by Staff Writer 27-06-2019 | 11:05 AM
Colombo (News 1st) யட்டியந்தோட்டை - பெலம்பிட்டி பிரதான வீதியின் - வீ ஓய தோட்டப்பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 28 பேர் காயமடைந்துள்ளனர். சுமார் 15 அடி பள்ளத்தில் வீழ்ந்து குடைசாய்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கரவனெல்ல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. பெலம்பிட்டியிலிருந்து அவிசாவளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றே இன்று (27ஆம் திகதி) காலை இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.