இறக்குவானையில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு; இருவர் காயம்

by Staff Writer 27-06-2019 | 3:31 PM
Colombo (News 1st) இறக்குவானை - பொத்துப்பிட்டி பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதே மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பொத்துப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குருவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரும், 31 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவருமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.