இயற்கை எய்திய மூத்த ஊடகவியலாளர் எஸ். தில்லைநாதனின் இறுதிக்கிரியைகள் நாளை நடைபெறவுள்ளன

by Staff Writer 27-06-2019 | 5:48 PM
Colombo (News 1st) இயற்கை எய்திய மூத்த ஊடகவியலாளர் எஸ். தில்லைநாதனின் இறுதிக்கிரியைகள் நாளை (28) பொரளை மயானத்தில் நடைபெறவுள்ளன. தமிழ் பத்திரிகைத்துறையின் மூத்த ஊடகவியலாளர் எஸ். தில்லைநாதன் தனது 75 ஆவது வயதில் நேற்று காலமானார். சக்தி செய்தி பிரிவில் முகாமையாளராகவும் பணியாற்றிய எஸ். தில்லைநாதன் பல பத்திரிகைகளின் பிரதம ஆசிரியராக சேவையாற்றியுள்ளார். இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திலும் இவர் நீண்ட காலம் சேவையாற்றியிருந்தார். ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக ஊடக அனுபவத்தைக் கொண்ட எஸ். தில்லைநாதன் சிறந்த எழுத்தாளராகத் திகழ்ந்தார். அன்னாரின் பூதவுடல் பொரளையில் உள்ள தனியார் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், நாளை மாலை இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளன.