ஹுங்கம துறைமுகத்தில் தீ

ஹுங்கம துறைமுகத்தில் தீ: 20க்கும் அதிக மீன்பிடிப் படகுகள் தீக்கிரை

by Staff Writer 26-06-2019 | 6:57 AM
Colombo (News 1st) ஹுங்கம - குருபொத்துன துறைமுகத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதனால் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த 20க்கும் அதிகமான மீன்பிடிப் படகுகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (26ஆம் திகதி) அதிகாலை இந்தத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதையடுத்து, சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக 5 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ஏனைய செய்திகள்