சுதந்திர கட்சி - பொதுஜன பெரமுன இடையே பேச்சு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இடையேயான 6ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்று

by Staff Writer 26-06-2019 | 8:09 AM
Colombo (News 1st) புதிய கூட்டமைப்பொன்றைக் கட்டியெழுப்பும் நோக்கில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இடையில் 6ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்று (26ஆம் திகதி) இடம்பெறவுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று காலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கடந்த 17ஆம் திகதி இடம்பெறவிருந்த கலந்துரையாடல் இரு தரப்பினதும் இணக்கப்பாட்டுக்கு அமைய ஒத்திவைக்கப்பட்டதுடன், ஆறாம் கட்ட பேச்சுவார்த்தைக்காக இரு தரப்பினரும் இன்று சந்திக்கவுள்ளனர்.

ஏனைய செய்திகள்