ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக்கும் வர்த்தமானியில் போக்குவரத்து அமைச்சர் கைச்சாத்து

by Staff Writer 26-06-2019 | 7:17 PM
Colombo (News 1st) ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக்குவதற்கான வர்த்தமானியில் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இன்று கைச்சாத்திட்டுள்ளார். ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, ஓய்வுபெற்ற ரயில் சாரதிகள், பாதுகாவலர்கள், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள், சமிக்ஞை மேற்பார்வையாளர்கள் மற்றும் ரயில் மார்க்க பரிசோதகர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்களுக்காக நாளை மறுதினம் (28) நாரஹேன்பிட்டி ஷாலிக்கா மைதானத்திற்கு வருகை தருமாறு ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களுக்கு போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை பிரதி வியாழக்கிழமைகளில் நள்ளிரவு 12 மணி முதல் ஒருநாள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ரயில்வே தொழிற்சங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.