Millennium Challenge நிறுவன நிதியுதவிக்கான நிபந்தனைகளுக்கு அமைச்சரவையில் ஜனாதிபதி எதிர்ப்பு

by Staff Writer 25-06-2019 | 8:21 PM
Colombo (News 1st) Millennium Challenge Corporation நிறுவனத்தினூடாக இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நிதியுதவிக்கான நிபந்தனைகளுக்கு அமைச்சரவையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். நிபந்தனைகளை ஆராய வேண்டியது அவசியம் என்பதுடன், எதிர்வரும் திங்கட்கிழமை (1) மீண்டும் கலந்துரையாடப்பட வேண்டும் என ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.