சிறுபோகத்திற்கான நீரின் தேவை அதிகரிப்பு

தொடரும் வறட்சி; சிறுபோகத்திற்கான நீரின் தேவை அதிகரிப்பு

by Staff Writer 25-06-2019 | 8:52 AM
Colombo (News 1st) நாட்டில் நிலவிவரும் வறட்சியுடனான வானிலையுடன் சிறுபோகத்திற்கான நீரின் தேவை அதிகரித்துள்ளதாக, நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வறட்சியான வானிலை தொடருமானால் நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்ந்தும் குறைவடையும் என நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, அம்பாறை மாவட்டத்திலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 13 வீதமாகவும் மட்டக்களப்பிலுள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 15 வீதமாகவும் மொனராகலை மாவட்டத்திலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 17 வீதமாகவும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, புத்தளம், அநுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, ஹம்பாந்தோட்டை மற்றும் குருணாகல் உள்ளிட்ட மாவட்டங்களிலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் முறையே 28, 46, 45, 48, 54 மற்றும் 42 வீதமாகக் குறைவடைந்துள்ளது. அத்துடன், கடந்த 3 மாதங்களில் எதிர்பார்த்த அளவு மழைவீழ்ச்சி பதிவாகவில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த மே, ஏப்ரல் மற்றும் மார்ச் மாதங்களில் சாதாரண அளவைக் காட்டிலும் குறைந்த மழைவீழ்ச்சியே கிடைத்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.