கொழும்பின் பல பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு

by Staff Writer 25-06-2019 | 11:12 AM
Colombo (News 1st) மஹரகம, பன்னிபிட்டிய உள்ளிட்ட கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (26ஆம் திகதி) காலை 9 மணி முதல் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தின் கிழக்கு பிராந்தியத்தின் குடிநீர் செயற்றிட்டத்திற்கான குழாய் கட்டமைப்பை விருத்தி செய்வதற்காக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய, மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிப்பிட்டி, ருக்மல்கம, பெலன்வத்த, மத்தேகொட, ஹோமாகம, மீபே மற்றும் பாதுக்க ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

ஏனைய செய்திகள்