கிளிநொச்சியில் ரயிலுடன் இராணுவ வாகனம் மோதி விபத்து; ஐவர் உயிரிழப்பு

by Staff Writer 25-06-2019 | 2:44 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - காளிகோயில் 55ஆம் கட்டை பகுதியில் ரயில்வே கடவையில் இராணுவத்தினர் பயணித்த லொறியொன்று கடுகதி ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் மேலும் 2 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (25ஆம் திகதி) பிற்பகல் 1.45 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான லொறியில் 4 இராணுவ வீரர்கள் பயணித்துள்ளனர்.