மண்சரிவு அபாயம்: 15 குடும்பங்கள் இடமாற்றம்

கரதியான கழிவகற்றல் பகுதியிலிருந்து 15 குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன

by Staff Writer 25-06-2019 | 4:11 PM
Colombo (News 1st) மண்சரிவு அபாயம் காரணமாக பிலியந்தலை - கரதியான கழிவகற்றல் பகுதியிலிருந்து 15 குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மேல் மாகாண கழிவகற்றல் முகாமைத்துவ அதிகார சபையின் பணிப்பாளர் நலீன் மானப்பெரும குறிப்பிட்டார். மண்சரிவு அபாயம் காரணமாக கரதியான கழிவகற்றல் நிலையத்தில் மேற்கொள்ளப்படவிருந்த பாரிய செயற்றிட்டமும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்த நிலையில், குறித்த பகுதியில் அதிக அபாயம் நிலவும் வலையத்திலுள்ளவர்களின் உயிரையும் உடைமைகளையும் பாதுகாக்கும் வகையில், அங்கிருந்து அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர் அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண கழிவகற்றல் முகாமைத்துவ அதிகார சபையின் பணிப்பாளர் நலீன் மானப்பெரும சுட்டிக்காட்டினார்.