​ஹேமசிறிக்கு எதிராக குற்றவியல் விசாரணை

ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிராக குற்றவியல் விசாரணையை ஆரம்பிக்குமாறு சட்டமா அதிபர் ஆலோசனை

by Staff Writer 24-06-2019 | 7:08 PM
Colombo (News 1st) முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிராக குற்றவியல் விசாரணையை ஆரம்பிக்குமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, பிரதிப் பொலிஸ்மா அதிபர் C.D. விக்ரமரத்னவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல்களுடன் தொடர்புடைய சம்பவங்களைத் தடுக்கவோ அல்லது குறைக்கவோ தவறியமையை காரணமாகக் கொண்டு கடமையைப் புறக்கணித்ததாகத் தெரிவித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசேட விசாரணைக் குழுவின் பரிந்துரைகளை பரிசீலனைக்கு உட்படுத்திய பின்னர் சட்டமா அதிபரினால் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு குற்றவியல் விசாரணைக்கான ஆலோசனை வழங்கப்பட்டதாக, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதன்போது தெரிவித்துள்ளார்.