தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரம் ஆரம்பம்

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரம் ஆரம்பம்

by Staff Writer 23-06-2019 | 1:42 PM
Colombo (News 1st) தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரம் இன்று (23ஆம் திகதி) ஆரம்பமாகின்றது. இன்று முதல் எதிர்வரும் முதலாம் திகதி வரை தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக, கலால்வரி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார். இந்த காலப்பகுதிக்குள் பல்வேறு போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. எதிர்வரும் 26ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத கடத்தல்களுக்கு எதிரான சர்வதேச தினத்தை அடிப்படையாகக்கொண்டு தேசிய போதைப் பொருள் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதும் அனைத்து இலங்கையர்களும் இதற்காக ஒன்றிணைய வேண்டும் என்பதும் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.