கடலலையில் சிக்குண்டு தந்தையும் மகளும் உயிரிழப்பு

கிரிந்த பகுதியில் கடலலையில் சிக்குண்டு தந்தையும் மகளும் உயிரிழப்பு

by Staff Writer 23-06-2019 | 11:35 AM
Colombo (News 1st) கிரிந்த - யால பகுதியில் கடலலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட தந்தை மற்றும் மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இன்று (23ஆம் திகதி) காலை கடற்கரைக்கு சென்ற இருவரே, இவ்வாறு கடலலையில் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் 4 வயதான சிறுமியே உயிரிழந்துள்ளார். இதேவேளை, கடலலையில் அள்ளுண்டு செல்லப்பட்டு, மீட்கப்பட்ட தாயும் 8 வயதான மகளும் தெபரவெவ வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹற்றனை சேர்ந்தவர்களே இந்த சம்பவத்தை எதிர்நோக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நுவரெலியாவிலிருந்து சுற்றுலா வந்தவர்களே சம்பவத்தை எதிர்நோக்கியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும் இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.