by Staff Writer 23-06-2019 | 7:59 AM
Colombo (News 1st) ஈரான் மீது மேலும் பாரிய தடைகளை விதிக்கவுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அணுவாயுதங்களைப் பெறுவதில் ஈரானைத் தடுக்கும் வகையில் இந்தத் தடைகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் தமது அணுவாயுதங்கள் தொடர்பான திட்டங்களைக் கைவிடும் வரையில் அதன்மீதான பொருளாதார அழுத்தங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்காகவே மேலதிகத் தடைகள் விதிக்கப்படுவதாகவும் சில விடயங்கள் காரணமாக அதனை மிக விரைவாக முன்னகர்த்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட அளவிற்கு தமது அணுவாயுதத் திட்டங்களை விரிவுபடுத்தவுள்ளதாக ஈரான் அறிவித்ததையடுத்தே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த மேலதிகத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.