by Staff Writer 22-06-2019 | 6:49 PM
Colombo (News 1st) வவுனியா - செட்டிக்குளம் பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
செட்டிக்குளம் - தொடரி குளம் பகுதியில் வசித்து வந்த நான்கு பிள்ளைகளின் தாயாரான 40 வயதான ரவிச்சந்திரன் அந்தோனியம்மா என்ற பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் உயிரிழந்த நிலையில் வீட்டிற்குள் இருந்து நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பெண்ணின் கணவரால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் தலைமறைவாகியுள்ள நிலையில், பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
உயிரிழந்த பெண்ணின் நான்கு பிள்ளைகளும் வவுனியாவிலுள்ள மாணவர் விடுதி ஒன்றில் தங்கி கல்வி கற்று வருவதாக செய்தியாளர் தெரிவித்தார்.