by Staff Writer 22-06-2019 | 3:45 PM
Colombo (News 1st) அவசரகால சட்ட ஏற்பாடுகள் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்டுள்ள அவசரகால சட்ட ஏற்பாடுகளை நீடிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானியில் ஜனாதிபதி செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன கையொப்பமிட்டுள்ளார்.
நாட்டில் அவசரகால நிலை தொடர்வதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த அதிவிசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியை பாதுகாத்தல் மற்றும் நாளாந்த வாழ்க்கைக்கு தேவையான சேவைகளை வழங்குவது உள்ளிட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அவசரகால சட்ட ஏற்பாடுகளை நீடிப்பது உசிதமானது என கருதி இந்த அதி விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.