8 அலுவலக ரயில்கள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளன

8 அலுவலக ரயில்கள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளன

by Staff Writer 21-06-2019 | 6:32 PM
Colombo (News 1st) ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக 8 அலுவலக ரயில்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது. இதன் பிரகாரம், புறக்கோட்டைக்கும் ரம்புக்கனவிற்கும், புறக்கோட்டைக்கும் பொல்கஹவெலவிற்கும், புறக்கோட்டைக்கும் மஹவவிற்கும் இடையிலான ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுமென ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டது. புறக்கோட்டைக்கும் சிலாபத்திற்குமிடையிலான அலுவலக ரயில் சேவை, சாதாரண ரயில் சேவையாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் நிலையம் தெரிவித்தது. இதற்கு மேலதிகமாக மருதானைக்கும் மாத்தறைக்கும், மருதானைக்கும் காலிக்கும் இடையிலான ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன. ரயில் சாரதிகள், காவலர்கள், கட்டுப்பாட்டாளர்கள், நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் ரயில் கண்காணிப்பு முகாமையாளர்கள் நேற்று (20) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.