யாழ்ப்பாணத்தில் ரயிலில் மோதுண்டு பெண் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் ரயிலில் மோதுண்டு பெண் உயிரிழப்பு

by Staff Writer 21-06-2019 | 4:23 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - எழுதுமட்டுவாள் கரம்பகம் ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி ரயிலில் மோதுண்டே குறித்த பெண் உயிரிழந்துள்ளார். ரயில் கடவையை கடக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் விபத்திற்குள்ளாகியதாக பொலிஸார் கூறினர். இன்று பிற்பகல் 2.10 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் எழுதுமட்டுவாள் பகுதியை சேர்ந்த 50 வயதான மாணிக்கம் மகேஷ்வரி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.