இமய மலையில் பனி உருகுவது இரண்டு மடங்கானது

இமய மலையில் பனி உருகுவது இரண்டு மடங்கானது

by Bella Dalima 21-06-2019 | 5:11 PM
இமய மலையில் பனி உருகுவது கடந்த 2000 ஆம் ஆண்டைப் போல் இரண்டு மடங்காகியுள்ளமை அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. புவி வெப்பமயமாதல் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதன் விளைவாக இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் எனவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.