தீக்குச்சிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீவிபத்து

இந்தோனேசியாவில் தீக்குச்சிகள் தயாரிக்கும் சிறிய ரக தொழிற்சாலையில் தீ விபத்து: 30 பேர் பலி

by Bella Dalima 21-06-2019 | 5:02 PM
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் தீக்குச்சிகள் தயாரிக்கும் சிறிய ரக தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் குழந்தைகள் உள்ளிட்ட 30 பேர் உயிரிழந்துள்ளனர். வீடு ஒன்றில் இந்த தொழிற்சாலை இயங்கி வந்துள்ளது. விபத்தின் போது 30 பேர் உள்ளே இருந்துள்ளனர். எவரும் உயிர் பிழைத்ததாக தகவல் வௌியாகவில்லை. உயிரிழந்தவர்களில் மூன்று சிறுவர்களும் அடங்குவதாகக் கூறப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் இதுவரை தெரியவரவில்லை.