கொழும்பின் பல பகுதிகளில் 22 ஆம் திகதி நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் 22 ஆம் திகதி நீர்வெட்டு

by Staff Writer 20-06-2019 | 3:35 PM
Colombo (News 1st) கொழும்பின் பல பகுதிகளுக்கு எதிர்வரும் சனிக்கிழமை (22) காலை 9 மணி முதல் 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, கோட்டை மற்றும் கடுவல ஆகிய மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்தது. மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் கொலன்னாவ ஆகிய பகுதிகளிலும் எதிர்வரும் சனிக்கிழமை 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கொட்டிகாவத்த, முல்லேரியாவ, இரத்மலானை மற்றும் சொய்சாபுர தொடர்மாடி குடியிருப்பு ஆகிய பகுதிகளுக்கும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மின் விநியோகக் கட்டமைப்பில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்தப் பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.