வெனிசூலாவிலிருந்து 3 மில்லியன் மக்கள் இடம்பெயர்வு

கடந்த வருடத்தில் அதிகமானோர் இடம்பெயர்வு - ஐ.நா.

by Staff Writer 20-06-2019 | 1:45 PM
Colombo (News 1st) 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த வருடத்தில் பெரும்பாலானோர் இருப்பிடங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டின் இறுதிக்குள் 70.8 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு 68.5 மில்லியன் மக்கள், உள்நாட்டு யுத்தம் காரணமாக கட்டாயத்தின் பேரில் இடம்பெயர்ந்தவர்கள் என ஐக்கிய நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளது. வெனிசூலாவிலிருந்து மாத்திரம் சுமார் 3 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். தனது நாட்டிலிருந்து வௌியேறிய அகதி ஒருவர், யுத்தம் மற்றும் அச்சம் காரணமாக தமது நாட்டிற்கு திரும்புவதில்லை என சர்வதேச மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது.