by Staff Writer 20-06-2019 | 11:34 AM
Colombo (News 1st) குவைத்திற்கு வீட்டுப் பணிப்பெண்களாக சென்றிருந்த 54 பெண்கள் இன்று (20ஆம் திகதி) அதிகாலை நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
குவைத்திலுள்ள இலங்கை தூதரகத்தினூடாக இவர்கள் திருப்பியனுப்பப்பட்டதாக வௌிநாட்டு
வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளவர்களில் 37 பேர், குவைத்திலுள்ள இலங்கை தூதரகத்திற்குரிய பாதுகாப்பு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.