அலோசியஸ் வௌிநாடு செல்வதை தடுக்க நகர்த்தல் பத்திரம்

ஜெஃப்ரி ஜோசப் அலோசியஸ் வௌிநாடு செல்ல வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்யுமாறு நகர்த்தல் பத்திரம் தாக்கல்

by Staff Writer 19-06-2019 | 6:38 PM
Colombo (News 1st) பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப்ரி ஜோசப் அலோசியஸூக்கு வௌிநாடு செல்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்யுமாறு சட்ட மா அதிபரால் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்திற்கு நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் இரு தரப்பினரும் தமது தரப்பு விளக்கங்களை முன்வைப்பதற்கு நாளைய தினம் வரை விசாரணையை கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன இன்று ஒத்திவைத்தார். மகளின் திருமண வைபவத்தில் கலந்துகொள்வதற்காக ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை சிங்கப்பூர் செல்ல ஜெஃப்ரி ஜோசப் அலோசியஸுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. மத்திய வங்கி முறிகள் மோசடியின் சந்தேகநபரான ஜெஃப்ரி ஜோசப் அலோசியஸ் உள்ளிட்டவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசேட மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதால், வௌிநாட்டிற்கு செல்வதற்கான அனுமதியை இரத்து செய்யுமாறு சட்ட மா அதிபர் திணைக்களம் மன்றுக்கு அறிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்