ரயில் ஊழியர் பணிப்பகிஷ்கரிப்பு பிற்போடப்பட்டுள்ளது

ரயில் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு பிற்போடப்பட்டுள்ளது

by Staff Writer 19-06-2019 | 5:13 PM
Colombo (News 1st) இன்று (19) நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படவிருந்த ரயில் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நாளை (20) பிற்பகல் 2 மணிக்கு பிற்போடப்பட்டுள்ளது. எஞ்சின் சாரதிகள், ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள், ரயில்வே பாதுகாவலர்கள், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் உள்ளிட்டோர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். சம்பள முரண்பாடுகள் தொடர்பில் அனுமதி வழங்கப்பட்ட அமைச்சரவைப்பத்திரம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படாமைக்கு எதிர்ப்பு வௌியிட்டே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, பணிப்பகிஷ்கரிப்பு பிற்போடப்பட்டுள்ளதாக ரயில்வே Locomotive பொறியியலாளர் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார். நிதி அமைச்சருடன் கலந்துரையாடி, தமது கோரிக்கைக்கு தீர்வு பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக இந்திக்க தொடங்கொட குறிப்பிட்டுள்ளார்.