சமுர்த்தி கிடைக்காத மலையக மக்கள் மேன்முறையீடு

சமுர்த்தி கிடைக்காத மலையக மக்களை மேன்முறையீடு செய்யுமாறு அறிவித்தல்

by Staff Writer 18-06-2019 | 8:58 PM
சமுர்த்தி திட்டத்துக்குள் இதுவரை உள்வாங்கப்படாத அல்லது சமுர்த்தி கிடைக்கப்பெறாத மலையக மக்கள் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் மேன்முறையீடு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் பட்சத்தில் சமுர்த்தி உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது இதேவேளை, பெருந்தோட்டங்களை சேர்ந்த மக்கள் சமுர்த்தி கொடுப்பனவில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.