சீன உணவகம் ஒன்று சுற்றிவளைப்பு

குடிவரவு குடியல்வுத் திணைக்களத்தினரால் சீன உணவகம் ஒன்று சுற்றிவளைப்பு

by Staff Writer 17-06-2019 | 7:39 PM
Colombo (News 1st) குடிவரவு குடியல்வுத் திணைக்களத்தின் விசாரணை அதிகாரிகளினால் இன்று கொழும்பு நகர மண்டபம் பகுதியிலுள்ள சீன உணவகமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. வீசாயின்றி நாட்டுக்கு வருகை தந்திருந்த சீன பிரஜைகள் இருவர் இதன்போது கைது செய்யப்பட்டதாக, குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. உணவக உரிமையாளராக பெண்ணொருவர் விசாரணைகளுக்காக தமது கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக, திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.