4/21 தாக்குதல் குறித்து நேபாள பாதுகாப்பு அமைச்சர்

ஏப்ரல் 21 தாக்குதல் தெற்காசியாவுக்கான நேரடி பயங்கரவாத அச்சுறுத்தல் - நேபாளம்

by Staff Writer 17-06-2019 | 5:35 PM
Colombo (News 1st) இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள், தெற்காசியாவுக்கு விடுக்கப்பட்ட நேரடி பயங்கரவாத அச்சுறுத்தல் என, நேபாள பாதுகாப்பு அமைச்சர் ஈஸ்வர் போக்ரேல் (Ishowor Pokhrel) தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் தௌிவான தகவலொன்றை வழங்குவதாகவும் நேபாளத்தின் துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ஈஸ்வர் போக்ரேல் தெரிவித்துள்ளார். நேபாள இராணுவம் ஏற்பாடு செய்திருந்த 'பொதுமக்கள் பாதுகாப்பு - பயங்கரவாத ஒழிப்பு' எனும் தொனிப்பொருளிலான கலந்துரையாடலின்போது நேபாள பாதுகாப்பு அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.