2230 கிலோ கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது

2230 கிலோ கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது

by Staff Writer 16-06-2019 | 2:15 PM
Colombo (News 1st) தவுலகல பகுதியில் பாவனைக்கு உதவாத கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கழிவுத்தேயிலையை லொறியொன்றில் ஏற்றிச்செல்லும்போதே சந்தேகநபர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேகநபரிடமிருந்து 2,230 கிலோகிராம் கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளுக்காக கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேகநபர் தவுலகல பொலிஸார் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.