நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்

by Staff Writer 16-06-2019 | 8:04 AM
Colombo (News 1st) கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் இன்று (16ஆம் திகதி) பிற்பகல் மழை பெய்யலாம் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய , சப்ரகமுவ மற்றும் வட மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வானிலை அதிகாரி தெரிவித்துள்ளார். அத்தோடு, சில கடற்பிராந்தியங்களில், காற்று மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், கடற்சார் ஊழியர்கள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்