by Staff Writer 16-06-2019 | 11:21 AM
Colombo (News 1st) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (16ஆம் திகதி) காலை நாடு திரும்பியுள்ளார்.
தஜிகிஸ்தானின் நடைபெற்ற ஆசிய நடவடிக்கைகள் மற்றும் நம்பகத்தன்மையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்டதன் பின்னர் ஜனாதிபதி நாடு திரும்பியுள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தஜிகிஸ்தானுக்கு சென்றிருந்த ஜனாதிபதி, அந்நாட்டு ஜனாதிபதியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டுள்ளார்.
இதேவேளை, ரஷ்ய ஜனாதிபதி விளாமிர் புட்டினையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.