உள்ளூர் கிழங்கு செய்கையை மேம்படுத்த நடவடிக்கை

கேகாலையில் உள்ளூர் கிழங்கு செய்கையை மேம்படுத்த நடவடிக்கை

by Staff Writer 16-06-2019 | 12:35 PM
Colombo (News 1st) கேகாலை மாவட்டத்தில் உள்ளூர் கிழங்கு செய்கையை மேம்படுத்துவதற்கு மாவட்ட செயலகத்தின் விவசாயப்பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. உள்ளூர் கிழங்குக்கு நிலவும் அதிக கேள்வியினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகம் குறிப்பிட்டுள்ளது. செய்கையிடப்படும் கிழங்கு உற்பத்திகளை ஏற்றுமதி செய்வது தொடர்பில் செய்கையாளர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக கேகாலை மாவட்ட செயலகத்தின் விவசாயப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.