கலால்வரி சட்டத்தை மீறுவோர் கைது

கலால்வரி சட்டத்தை மீறுவோரை கைது செய்யும் விசேட வாரம் பிரகடனம்

by Staff Writer 16-06-2019 | 8:02 AM
Colombo (News 1st) கலால்வரித் திணைக்களத்தின் சட்டத்தை மீறுவோரைக் கைது செய்வதற்கான விசேட வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று (15ஆம் திகதி) முதல் இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதுமுள்ள 58 கலால்வரித் திணைக்கள அலுவலங்களில் கடமைபுரியும் 1000க்கும் அதிகமான அதிகாரிகள் இதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, கலால்வரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, குறித்த காலப்பகுதிக்குள் பிரதேசத்திற்குள் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பில் தகவல்களை வழங்குவதற்கும் கலால்வரித் திணைக்களம் தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 011 2192192 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொண்டு தகவல்களை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.