ஏறாவூரில் தீப்பற்றிய முச்சக்கரவண்டி

ஏறாவூரில் தீப்பற்றிய முச்சக்கரவண்டி

by Fazlullah Mubarak 16-06-2019 | 5:48 PM

மட்டக்களப்பு ஏறாவூரிலிருந்து பெரியபுல்லுமலை வெலிக்காகண்டி குளக்கட்டு நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

ஏறாவூரைச் சேர்ந்த மொஹமட் இர்பான் என்பவர், தமது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் இந்த முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளார். மனைவியையும் பிள்ளைகளையும் இறக்கிவிட்டு முச்சக்கரவண்டியை அடுத்த பக்கமாக திருப்பும்போது தீப்பற்றியுள்ளதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். தீப்பற்றியதையடுத்து முச்சக்கரவண்டி சாரதி உடனடியாக வௌியே பாய்ந்துள்ளார்.