2 கோடி பெறுமதியான போதைப்பொருட்களுடன் இருவர் கைது

2 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் இருவர் கைது

by Staff Writer 15-06-2019 | 5:43 PM
Colombo (News 1st) சீதுவ, ரத்தொளுகம பகுதிகளில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 2 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 2 கிலோகிராம் ஹெரோயின், 12 கிலோகிராம் கஞ்சா, 500 போதை வில்லைகள், துப்பாக்கி மற்றும் 7 ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். போதைப்பொருள் விற்பனையின் மூலம் ஈட்டப்பட்ட ஒரு இலட்சம் ருபாவிற்கும் அதிக பணமும் சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. சீதுவ - குஸ்வல வீதியின் இறப்பர் தோட்ட சந்தி பகுதியில் காரொன்றை சோதனையிட்ட போது 521 கிராம் ஹெரோயினுடன் நேற்று (14) மாலை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்தே ரத்தொளுகம பகுதியிலுள்ள வீடொன்று சோதனையிடப்பட்டு போதைப்பொருட்களுடன் மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கந்தான மற்றும் ரத்தொளுகம பகுதிகளை சேர்ந்த 29 மற்றும் 32 வயதான இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.