வெடிபொருட்களை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை

யாழில் மீட்கப்பட்ட வெடிபொருட்களை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை

by Staff Writer 15-06-2019 | 3:33 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - சிறுதீவில் நேற்று (14) மீட்கப்பட்ட வெடிபொருட்களை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெற தீர்மானித்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். யாழ். சிறுதீவில் நேற்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டன. 98 டெட்டனேட்டர்கள், C4 வெடி மருந்து உள்ளிட்ட வெடிபொருட்களும் கேபிள் வயர்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் இணைந்து இவற்றை கைப்பற்றியுள்ளனர்.

ஏனைய செய்திகள்