சிவப்பு அறிவித்தலின் படியே கைது செய்யப்பட்டனர்

சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே  ஐவர் கைது செய்யப்பட்டனர்: INTERPOL

by Staff Writer 15-06-2019 | 6:33 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதக் குழுவின் உறுப்பினரான 29 வயதான அஹமட் மில்ஹான் ஹயாது மொஹமட் என்பவர் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக INTERPOL அறிவித்துள்ளது. பயங்கரவாதத் தாக்குதலையடுத்து அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க இலங்கைக்கு உதவும் வகையில் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டதாக INTERPOL தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் கைது செய்யப்பட்ட அஹமட் மில்ஹான் ஹயாது மொஹமட் உள்ளிட்ட 5 சந்தேகநபர்கள் நேற்று (14) நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதுடன், அவர்கள் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களைக் கைது செய்ய ஒத்துழைப்பு வழங்கியதையிட்டு தாம் மகிழ்ச்சியடைவதாக INTERPOL-இன் செயலாளர் நாயகம் Jürgen Stock தெரிவித்துள்ளார்.