கம்பஹாவில் விசேட சுற்றிவளைப்பின்போது 155 பேர் கைது

கம்பஹாவில் விசேட சுற்றிவளைப்பின் போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 155 பேர் கைது

by Staff Writer 15-06-2019 | 3:57 PM
Colombo (News 1st) கம்பஹா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 155 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 36 பொலிஸ் நிலையங்களை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்களினால் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு குற்றச்செயல்களுக்காக நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 93 சந்தேகநபர்களும், ஏனைய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 62 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அனைவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.